யார் பாத்த வேலடா இது..? நல்லா சாப்ட்டு குண்டான இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. வைரலாகும் போட்டோஸ்..

By Nanthini

Updated on:

இந்திய அணி வீரர்கள் சமீபத்தில் ஐசிஐசிஐ உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அனைவரும் தோல்வியை சந்தித்தனர். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

   

தொடர்ச்சியாக பத்து ஆட்டங்களில் வெற்றிகளை குவித்த இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது.

அது மட்டுமல்லாமல் போட்டி முடிந்து தோல்வியை சந்தித்ததும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர். அந்த காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் உலுக்கியது.

இதனைத் தொடர்ந்து போட்டி முடிவடைந்ததும் இந்திய அணி வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்ற பிரதமர் மோடி வீரர்கள் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

இதனிடையே சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்ற முடிந்த ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை தட்டி சென்றது.

இதற்கு முன்னதாக ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக எதிரணிகளை மிரட்டிய இந்தியா செமி பைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்தது.

அந்த வெற்றிகளுக்கு பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி பங்கேற்றனர். ஆனால் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு முகமது ஷமி, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர சடேஜா ஆகிய பவுலர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டு இந்தியா பெரிய வெற்றிகளைப் பெற முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகின்றது.

இந்த நிலையில் இன்று AI என்ற தொழில்நுட்பத்தால் பல்வேறு வேலைகளும் மிக எளிதாக செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரது புகைப்படங்களும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு எடிட் செய்யப்படுகிறது.

அதன்படி இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவு junk food சாப்பிட்டால் எதிர்காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பது போல புகைப்படங்களை சித்தரித்து வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிவேகமாக பகிரப்பட்டு வருகிறது.

author avatar
Nanthini