மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

By vinoth on மே 2, 2024

Spread the love

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர் அடுத்து நடிகர் விக்ரம்மை வைத்து இயக்கிய “சாமி” திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் இயக்குனராக மாறினார்.

அதனை தொடர்ந்து “ஆறு”, “தாமிரபரணி”, “வேல்”, “சிங்கம்” என அதிரிபுதிரியான பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார் ஹரி. இவரது திரைப்படங்களில் திரைக்கதை விறுவிறுவென செல்லும். இது இவரது தனித்துவமான பாணியாக ஆகிப்போனது. அதே போல் இவரது திரைப்படங்களில் வசனங்கள் அனைத்தும் அனல் பறக்கும். அதே போல இவரின் படங்களின் கதாநாயகனாகவோ அல்லது ஒரு ரௌடியாகவோதான் இருப்பான். ஆக்‌ஷன் காட்சிகளுக்காக இப்படி தனது கதைக்களத்தை வடிவமைத்துக் கொள்வார் ஹரி.

   

ஹரியின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது அவர் இயக்கிய சாமி திரைப்படம். அந்த படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் பாடல்கள் என அனைத்தும் ஹிட்டாகி ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தில் விக்ரம்மின் அறிமுகப் பாடலான திருநெல்வேலி அல்வாடா பாடல் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு மாஸ் பாடலாக அமைந்துள்ளது.

   

சாமி படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் உருவாக்கம் நடைபெற்ற போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை ஹரி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அப்போது பாடலில் தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் பொருட்கள் மற்றும் ஊர்களை வைத்து எழுதலாம் என முடிவு செய்து நா முத்துக்குமார் எழுத தொடங்கியுள்ளார்.

 

திருநெல்வேலி அல்வா, திருச்சி மலைக்கோட்டை, பாண்டிச்சேரி தண்ணி என வரிசையாக வரிகள் வந்து விழுந்துள்ளன. ஒரு இடத்தில் மட்டும் மெட்டுக்கு வரிகள் சிக்காமல் இருந்துள்ளது. அப்போது இயக்குனர் ஹரி உள்ளே புகுந்து ‘நாட்டுச்சாலை சக்கரை… என்ன செக்கு போல சுத்துற” எனக் கூறியுள்ளார். அந்த வரிகள் மெட்டுக்கு ஏற்றார்போல கச்சென்று உட்கார்ந்துள்ளது. இதுபோல தன் பட பாடல்களில் பல வரிகளை சொல்லியுள்ளாராம் இயக்குனர் ஹரி.