இதெல்லாம் அநியாயம்… பணம் இருந்த என்ன வேணாலும் பண்ணலாமா?… “ரூ.50 கூலி கேட்டது தப்பா?” முதலாளியின் கொடூர முகம்… துப்பாக்கி சுட்டால்… துடிதுடிக்கும் பிஞ்சு உசுரு… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலேஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள காஃபி தோட்டத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 24ஆம் தேதி வேலைக்குச் செல்வதற்கு முன்பு, தங்களுக்கு தினக்கூலியாக வழங்கப்பட்டு வந்த ரூ. 350-ஐ ரூ. 400-ஆக உயர்த்தி வழங்குமாறு காஃபி தோட்ட உரிமையாளர் ஜெகதீஷ கவுடாவிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழுக்கூலியையும் உடனடியாக வழங்கக் கோரி தொழிலாளர்கள் உறுதியாக நின்றதால், அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக ஜெகதீஷ கவுடா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிக்குண்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தொழிலாளரின் 4 வயதுக் குழந்தையின் தலையில் பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாகக் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, மேல் சிகிச்சைக்காக மங்களூருவிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மூடிகெரே போலீசார், தலைமறைவாகியுள்ள காஃபி தோட்ட உரிமையாளர் ஜெகதீஷ கவுடாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கூலி கேட்ட தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

44 minutes ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

46 minutes ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

52 minutes ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

1 மணத்தியாலம் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

2 மணத்தியாலங்கள் ago