96 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு எது தெரியுமா…? இது மிக பிரபலமான நாடுகளில் ஒன்று தான்…

Spread the love

குழந்தைகள் தான் நம் வீட்டின் கண்கள் நாட்டின் எதிர்காலம் என்று கூறுவார்கள். நம் அடுத்த சந்ததியினருக்கு அஸ்திவாரமே குழந்தைகள் தான். உலகில் ஏராளமான நாடுகள் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். ஆனால் ஒரு பிரபலமான நாட்டில் குழந்தையே பிறக்காது கடந்த 96 ஆண்டுகளாக அந்த நாட்டில் குழந்தையே பிறக்கவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இனி காண்போம்.

96 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாட்டின் பெயர் தான் வாடிகன் நகரம். உலகின் மிகச் சிறிய நாடு இதுதான். இதுவரை இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லையாம். இந்த நாடு 1929 பிப்ரவரி 11 இல் உருவாக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அனைத்து பெரிய தலைவர்களும் இங்கு வாழ்கின்றனர். போப் இங்கேதான் ஆட்சி செய்கிறார்.

ஆனாலும் இவ்வளவு பிரபலமான நாடாக இருந்தாலும் ஏன் இந்த நாட்டில் குழந்தை பிறக்கவில்லை? அங்கு வாழும் பெண்கள் கர்ப்பமே தரிக்க மாட்டார்களா என்று உங்களுக்கு சந்தேகம் எனலாம். இந்த நாடு உருவான பிறகு பலமுறை மருத்துவமனை வேண்டும் என்று அனைவரும் கூறியபோதும் இங்கு நிராகரிக்கப்பட்டது. இங்கு யாராவது தீவிர நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பமானாலோ அவர்கள் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு தான் அனுப்பப்படுகிறார்கள். இந்த நாட்டில் மருத்துவமனைகளே கிடையாது.

வாடிகன் நகரத்தின் பரப்பளவு 118 ஏக்கர் மட்டுமே. அனைத்து நோயாளிகளும் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு தான் சிகிச்சைக்காக செல்ல வேண்டும். அதனால் ஒரு பெண் கர்ப்பம் தரித்தவுடன் அவர்களுக்கு குழந்தை பிறக்க வேண்டிய நேரம் வருவதற்கு முன்னரே ரோமுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் அல்லது அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து விடுவார்கள். வாடிகன் நாட்டின் விதிகளின்படி குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்தில் தாயானவள் அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற விதி அங்கே கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல் வாடிகன் நகரில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவது இல்லை. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது பதவிக்காலம் வரையே இங்கு இருப்பார்கள். அவர்கள் தற்காலிக குடியுரிமையை தான் பெற்றிருப்பார்கள். இது போன்ற காரணத்தினால் தான் இந்த நாட்டில் குழந்தையே பிறப்பதில்லை. இது ஒரு வினோதமான செய்தியாக தான் இருக்கிறது.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago