திடீர் திருப்பம்… சற்றுமுன் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்… செம குஷியில் துள்ளும் இபிஎஸ்…!

Spread the love

கடலூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது தாய் கட்சிகளில் இருந்து விலகி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) அதிகாரப்பூர்வமாக தங்களை இணைத்துக் கொண்டனர். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.A. பாண்டியன் முன்னெடுத்த இந்த சிறப்பான ஏற்பாட்டின்படி, சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் இந்த இணைவு விழா நடைபெற்றது. கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பாரம்பரியமிக்க இரட்டை இலை துண்டை அணிவித்து, கட்சியின் கொள்கைகளைப் பின்பற்றி உழைக்க வேண்டும் என வாழ்த்தி, இனிதே வரவேற்றார்.

இந்த பிரம்மாண்ட இணைப்பு விழாவில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அதிமுக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர். குறிப்பாக, மாவட்ட கழக இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எல்லேரி பிரபு, ஒன்றிய கழக செயலாளர் ரங்கசாமி, கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஒன்றிய அவை தலைவர் கோவிந்தராஜ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் சௌந்தரராஜன் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூர் கழக செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புதிதாக கட்சியில் இணைந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். கடலூர் மாவட்டத்தில் மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அதிமுகவில் இணைந்துள்ளது, அப்பகுதியில் அக்கட்சியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Visaka

Recent Posts

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

18 minutes ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

55 minutes ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

1 மணத்தியாலம் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

1 மணத்தியாலம் ago

“ஏமாத்துரத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?…” 2 கிலோ தங்கம்… 10 அடுக்குமாடி குடியிருப்பு… சந்தை மதிப்பு ரூ.150 கோடியா?… ஆனா சாதாரண எஞ்சினியர்… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை…!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…

1 மணத்தியாலம் ago

இது என்னடா புதுசா இருக்கு… “180% அதிக மழை…” இமயமலையைக் தாண்டி… 10,000 கி.மீ மேகப்படை… ஆசிய கண்டத்தையே சூழும் பேராபத்து?… மிரள வைக்கும் சாட்டிலைட் போட்டோ…!

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…

1 மணத்தியாலம் ago