தமிழகத்திலுள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் அக்டோபர் 6 இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. முதல் நாளான இன்றே மாணவர்கள் அனைவருக்கும் இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்களை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை இன்று விநியோகிக்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது, உபயோகம் இல்லாத மின்பொருள்கள் பள்ளி வளாகத்தில் இருக்கக் கூடாது, பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…