தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு… கடைசி நேரத்தில் பறந்த அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

தமிழகத்திலுள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் அக்டோபர் 6 இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. முதல் நாளான இன்றே மாணவர்கள் அனைவருக்கும் இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்களை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை இன்று விநியோகிக்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது, உபயோகம் இல்லாத மின்பொருள்கள் பள்ளி வளாகத்தில் இருக்கக் கூடாது, பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.