அடச்சீ இப்படியுமா?… தினம் தினம் அழைக்கும் மனைவி, சித்திரவதை தாங்க முடியல… வாலிபர் அளித்த பரபரப்பு புகார்…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

படுக்கையறை நெருக்கத்தை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்ததால் மனைவி அளித்த புகாரை வாலிபர் மறுத்துள்ளார். தினந்தோறும் தன்னுடைய மனைவி தான் தாம்பத்தியத்திற்கு அழைத்து சித்திரவதை செய்வார் என்று அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 32 வயது பெண் ஒருவர் கணவர் மீது பரபரப்பு புகாரை அளித்திருந்தார். அதாவது படுக்கையறையில் ரகசிய கேமரா பொருத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை தன்னுடைய கணவர் வீடியோ பதிவு செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரான சையது இனாமுல் (35) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் தன் மீது தன்னுடைய மனைவி அழைத்த புகாரை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு இரண்டு திருமணம் ஆகவில்லை. ஒருமுறைதான் திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மனைவிதான்.

   

வேறு எந்த ஒரு பெண்ணுடனும் எனக்கு தொடர்பு கிடையாது. என் மனைவி தான் என்னிடமிருந்து 17 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். என் மனைவிக்கு நான்தான் 13 லட்சம் வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு தினம் தோறும் என்னை தாம்பத்தியத்தில் ஈடுபட என் மனைவி வற்புறுத்துவார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஒரு மன நோயாளி போல நடந்து கொள்வார். என்னுடைய மனைவிதான் என்னை அதிக அளவில் சித்திரவதை செய்தார் என்று அந்த நபர் வீடியோவில் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.