“டேய், எங்க வந்து யார்கிட்ட”…. மெட்ரோ ரயிலில் அடித்துக் கொண்ட பயணிகள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். தினம்தோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறும் மெட்ரோ ரயிலில் புதுப்புது வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதனிடையே அடிக்கடி மெட்ரோ ரயிலில் சில அசம்பாவிதங்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அது தொடர்பான வீடியோக்களும் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதன்படி தற்போது தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு இடையே நடந்த மோதல் குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயில் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு பயணிகளும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிற பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.