துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 72 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 முதல் நிலை தேர்வை, 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதியிருந்த நிலையில் முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மற்றும் டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள மையங்களில் மட்டுமே இந்த தேர்வானது நடத்தப்படுகிறது. இந்நிலையில், குரூப் 1 முதன்மை தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என TNPSC அறிவித்துள்ளது. 10 தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற வீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் மூலமாக பதிவு செய்யப்படும் எனவும் TNPSC தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள்…
லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…
அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…
ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…