குரூப்-1 முதன்மை தேர்வர்கள் கவனத்திற்கு… TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!

By Soundarya on கார்த்திகை 24, 2025

Spread the love

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 72 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 முதல் நிலை தேர்வை, 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதியிருந்த நிலையில் முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மற்றும் டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள மையங்களில் மட்டுமே இந்த தேர்வானது நடத்தப்படுகிறது.  இந்நிலையில், குரூப் 1 முதன்மை தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என TNPSC அறிவித்துள்ளது. 10 தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற வீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் மூலமாக பதிவு செய்யப்படும் எனவும் TNPSC  தெரிவித்துள்ளது.