இனிமே சும்மா இருக்க மாட்டேன்.. நான் கோழை அல்ல, சட்டப்படி சந்திப்பேன்… நடிகர் பாலா விளக்கம்…!!

Spread the love

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும், ‘வீரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பாடகி அமிர்தா உடனான விவாகரத்துக்குப் பிறகு, கடந்த 2024-ஆம் ஆண்டு கோகிலா என்பவரை அவர் மறுமணம் செய்து கொண்டார். எனினும், அவரைச் சுற்றித் தொடரும் சட்டப் போராட்டங்கள், வழக்குகள் மற்றும் சர்ச்சைகள் அவரது மன அமைதியை முழுமையாகப் பாதித்துள்ளன.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் தனது புதிய வீடியோ பதிவில் பாலா மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். தான் திருமணமான நாள் முதற்கொண்டு பல இக்கட்டான விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து வாழ்ந்து வருவதாகவும், தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது இந்த உலகத்தில் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா என்றே சந்தேகம் எழுவதாகவும் அவர் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இனிமேலும் யாராவது தன்னைப்பற்றி அவதூறாகப் பேசினால் சும்மா இருக்கப் போவதில்லை என்றும், அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களுடன் வெளியில் கொண்டு வரப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஒருவேளை அந்த உண்மைகள் வெளிவரக் கூடாது என்று நினைத்தால், யாராவது தங்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் என்று தன் மனைவியுடன் சேர்ந்து பாலா வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

4 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

5 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

5 மணத்தியாலங்கள் ago