விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து (விசிக) அண்மையில் விலகிய பனையூர் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைத் தொடர்ந்து, மேலும் சில முக்கிய சிறுத்தைகளைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக தீவிரமாக முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தவெக அரசுக்கு விசிக ஆதரவளித்தாலும், திமுகவுடன்தான் தங்களின் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், தவெகவின் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றது திமுகவிற்கு மட்டுமன்றி, விசிகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உட்கட்சி மற்றும் கூட்டணிக் குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசிகவின் முக்கியப் புள்ளிகளைத் தங்கள் வசம் ஈர்க்கும் ‘ஆபரேஷனில்’ திமுக தற்பொழுது இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் களம் புதிய கூட்டணிகள் மற்றும் ஆட்சி மாற்றங்களால் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் இந்த அதிரடி நகர்வு விசிக வட்டாரத்திலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…