மத்திய பிரதேசம், கார்கோன் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம். குஷ்பூ பிப்லியா(23) இவர் போலீசில் வாக்குமூலம் ஒன்று அளித்துள்ளார். எனக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. திருமணமான நாளிலிருந்து இன்று வரை என் கணவன் என்னை அடித்து துன்புறுத்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என் கணவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். நான் சமையலறையில் இருந்தேன். அவர் என்னை கண்மூடித்தனமாக அடித்து கைகால்களை கட்டினார்.
பின்பு சமையலறையில் இருந்த கத்தியை சூடு படுத்தி எனது மார்பு கை கால்களில் கடுமையாக சூடு வைத்தார். வலியினால் கத்திகதறினேன் அதனால் அவர் வாயில் சூடு வைத்தார். அதுமட்டுமில்லாமல் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என் பெற்றோர் தான் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கூறி தொடர்ந்து அடித்துக் கொண்டேருந்தார். இந்தச் சம்பவம் நடக்கும் போது எங்கள் வீட்டில் அனைவருமே இருந்தனர் என்று அப்பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலை நாலு மணி அளவில் வீட்டிலிருந்து தப்பித்து வீட்டு வேலைக்காரியின் செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பதறிப்போன பெற்றோர் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் . பின்பு மருத்துவமனை மூலம் போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குஷ்பூவிடம் வாக்குமூலம் வாங்கிவுள்ளனர்.
என் மகளை பிடிக்காமல் அவர் இப்படி செய்யவில்லை வரதட்சணை கேட்டு திருமணமான நாளிலிருந்து கொடுமைப்படுத்தி வருகிறார். என் மகளுக்கு கட்டாயம் நீதி வேண்டும் என்று போலீசாரிடம் குஷ்புவின் தந்தை கூறியுள்ளார். இச்சம்பவத்தை குறித்து போலீஸார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் உத்திரபிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் மனைவியை கணவனே தீவைத்த எரித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…