மத்திய பிரதேசம், கார்கோன் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம். குஷ்பூ பிப்லியா(23) இவர் போலீசில் வாக்குமூலம் ஒன்று அளித்துள்ளார். எனக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. திருமணமான நாளிலிருந்து இன்று வரை என் கணவன் என்னை அடித்து துன்புறுத்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என் கணவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். நான் சமையலறையில் இருந்தேன். அவர் என்னை கண்மூடித்தனமாக அடித்து கைகால்களை கட்டினார்.
பின்பு சமையலறையில் இருந்த கத்தியை சூடு படுத்தி எனது மார்பு கை கால்களில் கடுமையாக சூடு வைத்தார். வலியினால் கத்திகதறினேன் அதனால் அவர் வாயில் சூடு வைத்தார். அதுமட்டுமில்லாமல் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என் பெற்றோர் தான் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கூறி தொடர்ந்து அடித்துக் கொண்டேருந்தார். இந்தச் சம்பவம் நடக்கும் போது எங்கள் வீட்டில் அனைவருமே இருந்தனர் என்று அப்பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலை நாலு மணி அளவில் வீட்டிலிருந்து தப்பித்து வீட்டு வேலைக்காரியின் செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பதறிப்போன பெற்றோர் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் . பின்பு மருத்துவமனை மூலம் போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குஷ்பூவிடம் வாக்குமூலம் வாங்கிவுள்ளனர்.
என் மகளை பிடிக்காமல் அவர் இப்படி செய்யவில்லை வரதட்சணை கேட்டு திருமணமான நாளிலிருந்து கொடுமைப்படுத்தி வருகிறார். என் மகளுக்கு கட்டாயம் நீதி வேண்டும் என்று போலீசாரிடம் குஷ்புவின் தந்தை கூறியுள்ளார். இச்சம்பவத்தை குறித்து போலீஸார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் உத்திரபிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் மனைவியை கணவனே தீவைத்த எரித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…