கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியைச் சேர்ந்த ரேகா கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் லோஹித்ஷ்வா. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரேகா வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவரது கணவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சாலையை கடப்பதற்காக ரேகா தனது மகளுடன் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது லோஹித்ஷ்வா அங்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை கொடூரமாக 11 முறை குத்தினார். அருகில் நின்ற மகள் தாயை காப்பாற்ற முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரேகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லோஹித்ஷ்வாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…