தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தை சேர்ந்த பரமேஷ் என்ற இளைஞர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அனுஷா (20) என்ற இளம் பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது. பெற்றோர் சம்மதத்தோடு கடந்த மார்ச் 12ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே திருமணமான மூன்றாவது மாதத்தில் இருந்து கூடுதல் வரதட்சணையாக பணம் மற்றும் நகை கேட்டு அனுஷாவை பரமேஸ் தொல்லை செய்து வந்துள்ளார்.
அனுஷாவை நேற்று பரமேஷ் மீண்டும் தாக்கிய நிலையில் இது பற்றி அறிந்த அனுஷாவின் தாயார் தன்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மருமகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாமியாரிடம் பேசி சமாதானப்படுத்தி அனுஷாவை தனது வீட்டுக்கு பரமேஷ் அழைத்து வந்துள்ளார். சாய்புரி கிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்ற போது அனுஷாவுடன் பரமேஷ் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த பரமேஷ் வீட்டின் அருகே இருந்த உருட்டு கட்டையால் காதல் மனைவியை கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமேஷ் மற்றும் அவரது பெற்றோரை தேடி வரும் நிலையில் அனுஷாவை பரமேஷ் கட்டையால் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…
வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…