கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி தனது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்துள்ளார். மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டப் பெயர் மாற்றம் மற்றும் நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக நடந்த இந்தப் பேரணியில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், சப்-இன்ஸ்பெக்டர் அம்ருதாவின் கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தாலிச் சங்கிலியை நைசாகத் திருடிச் சென்றுள்ளார். சுமார் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது நகையைத் தொலைத்ததை அறிந்த அந்த அதிகாரி, சம்பவ இடத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
சமீபத்தில் தான் அவர் அந்தச் சங்கிலியை வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் துணிகரத் திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிவமொக்கா போலீசார், போராட்டக் களத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணிக்கு வந்த பெண் அதிகாரியின் நகை திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற நடிகை த்ரிஷாவைச் சுற்றி அரசியல் குரல் ஒலித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை சுப்ரபாத…
பாதுகாப்பான மற்றும் உறுதியான லாபம் தரும் முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு அஞ்சலகத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Post Office Time Deposit…
திருமணமான பின்னரும் தனது முன்னாள் காதலனுடன் மனைவி உறவைத் தொடர்ந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அந்தரங்க உறுப்பில் மூன்று…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் ஒருவித…
கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க ஏசி (AC) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், அதன் செயல்திறனைத் தக்கவைக்க முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஏசியில்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய்…