குளிர்காலத்தில் அதிகரிக்கும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளைச் சமாளிக்க, நுரையீரல் சிறப்பு மருத்துவர் டாக்டர் சுஜய் ஹல்கூர் சங்கர் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். குளிர்காலத்தின் அதிகப்படியான குளிர்ச்சி மற்றும் வறண்ட காற்று சுவாசப் பாதைகளை எரிச்சலூட்டி, வீங்கிச் சுருங்கச் செய்வதால், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு இறுக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்தக் காலத்தில் காற்று மாசுபாடும் உச்சத்தில் இருக்கும், மேலும் சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும் வைரஸ் தொற்றுகளும் அதிகரிக்கும். குளிர்காலத்தில், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, இதய நோய், நீரிழிவு மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அதிக கவனம் தேவை. நுரையீரலைப் பாதுகாக்க அவர் கூறிய குறிப்புகள்:
வீட்டிற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துதல்: வீட்டிற்குள் ஏர் ப்யூரிஃபையர் பயன்படுத்துவது நல்லது. வீட்டின் அறைகளை காற்றோட்டமாகப் பராமரிக்க வேண்டும். மேலும், வீட்டுக்குள் ஊதுபத்தி, சாம்பிராணி, கொசுவர்த்தி சுருள் போன்றவற்றைத் தவிர்ப்பது அவசியம்.
அழற்சிப் பிரச்சினைகளைச் சமாளித்தல்: குளிர்கால ஆடைகள் மற்றும் போர்வைகளை (ஸ்வெட்டர், கம்பளி) பயன்படுத்தத் தொடங்கும் முன், அவற்றைக் கட்டாயம் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். செல்லப் பிராணிகளின் முடி மற்றும் பொடுகு கூட அழற்சியை ஏற்படுத்தலாம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.
தொற்றுக்களைத் தடுத்தல்: குளிர்காலத்தில் முகத்தை, கழுத்தை, காதுகளை மறைத்து மொத்தமான ஆடைகளை அணிய வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது எரிச்சலைத் தவிர்க்க, தகுந்த ஆடைகளை அணிய வேண்டும்.
தடுப்பூசி போடுதல்: மழை மற்றும் குளிர்காலத் தொற்றுக்களைத் தடுக்க, நிமோனியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளை ஆண்டுதோறும் தவறாமல் போட்டுக் கொள்வது அவசியம். குறிப்பாக, குழந்தைகள், வயதானவர்கள், நீரிழிவு அல்லது இதயம், நுரையீரல் போன்ற பிற அடிப்படை நோய் உள்ளவர்கள் தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் குளிர்காலப் பிரச்சினைகளைத் தவிர்த்து, நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…