“அதை வெளியே சொல்ல முடியாது!”.. ஈரான் நடுக்கடலில் இந்திய கப்பல்கள் தப்பிப்பது எப்படி?.. அம்பலமான வார் ரூம் ரகசியம்..!!

Spread the love

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழலால், உலகளாவிய பெட்ரோலியப் பொருட்களின் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு கடுமையாக எதிரொலித்து, எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவில் பெரும்பகுதி இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கப்பல்களில் கொண்டு வரப்படுகிறது. தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில், இந்தியாவிற்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுடன் அங்கு காத்துக்கிடக்கின்றன. அபாயகரமான இப்பகுதி வழியாக சில இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்ற விவரங்களை அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்த நெருக்கடிக்கு நடுவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மறுபுறம், மத்திய கப்பல் துறை அமைச்சகம் இந்திய கடற்படையுடன் இணைந்து ஒரு சிறப்பு ‘வார் ரூம்’ (War Room) அமைத்து, இப்பகுதி வழியே வரும் இந்தியக் கப்பல்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. மேலும், தாக்குதல்களில் இருந்து தப்பித்து பாதுகாப்பாக இந்தியா வந்து சேர, கப்பல் கேப்டன்களுக்கு இந்த வார் ரூம் மூலம் தொடர்ந்து ஆலோசனைகளும், மாற்று வழிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Muthu Mani

Recent Posts

டாக்டர்… என் குழந்தைக்கு 10 நாளா இருமல்… கொஞ்சம் பாருங்க… அடுத்த வாரம் வாங்க… நியூசிலாந்தில் கதறிய இந்தியத் தாய்… இணையத்தில் வைரல் வீடியோ…!

நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…

13 minutes ago

கடவுளே… நூலிழையில் தப்பிய உயிர்… சாலையில் நடந்த கொடூர விபத்து… உறைந்துபோன வாகன ஓட்டிகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…

18 minutes ago

காப்பாத்துங்க… காப்பாத்துங்க… கங்கையில் மூழ்கிய இரு மகள்கள்… காப்பாற்றக் குதித்து சிக்கிய தந்தை… ஒரே பாய்ச்சலில் 3 உயிர்களை மீட்டு… மரணத்தை வென்ற ஹீரோ… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…

26 minutes ago

ஐயோ பாவம்… நடுராத்திரியில் விவசாயி கொடூரமாகக் கொலை… காவல் நிலையத்தில் மனைவி… சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை… கிராமத்தில் திக் திக் சம்பவம்…!

யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

32 minutes ago

திக் திக்… கணவரின் வயிற்றை பிளந்து… குடலை எடுத்து பையில் அடைத்த கொடூர மனைவி… அரியானாவில் நடுங்க வைக்கும் சம்பவம்…!

அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…

43 minutes ago