கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி, வேலூர், நாகப்பட்டினம், சேலம் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பெரும் பேரணியாகத் திரண்டு சென்றனர். தஞ்சாவூரில் நடைபெற்ற இந்தப் பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கைது செய்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இந்த விவகாரம் ஒரு முக்கிய சவாலாகவும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. தேர்தலின் போது விவசாயக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், தற்போதைய பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அரசின் நடவடிக்கைகள் விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி போராட்டமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தை அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…