மிசோரோமில் உள்ள லாங்ட்லாயை சேர்ந்தவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் லால்மிங்முனா. இவருடைய ஆட்டோவில் மியான்மரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் பயணம் செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் பயணம் செய்த அந்த வியாபாரி ஒரு பாலிதீன் பையில் 17 லட்சம் ரூபாயை கொண்டு வந்திருக்கிறார். அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிவிட்டார். ஆனால் பணப் பையை தவறுதலாக மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டு சென்றார். பிறகு ஆட்டோ ஓட்டுநர் பணத்தோடு ஆட்டோவில் அங்கிருந்து சென்றிருக்கிறார்.
பிறகு சிறிது தூரம் சென்றபின் ஆட்டோவில் பணம் இருப்பதை பார்த்த அவர் அதை அந்த வியாபாரி இறங்கிய ஹோட்டலுக்கே சென்று மீண்டும் அவரிடமே ஒப்படைத்துள்ளார். அப்போது அந்த வியாபாரி அந்த பையில் இருந்த பணத்தை அப்படியே திருப்பி கொடுத்ததற்காக ஏதாவது வெகுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவஏ எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆட்டோ டிரைவரின் இந்த செயலுக்காக பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…