டெல்லியின் மாளவியா நகரில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களிடம் இனவெறி ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த ஹர்ஷ் சிங் என்பவர், தற்போது தனது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். வாடகை வீட்டில் மின்சார வேலை பார்த்தபோது ஏற்பட்ட சிறு தர்க்கம், அந்தப் பெண்களை ‘மோமோ’ என்று அழைப்பதிலும், அவர்களின் தொழில் குறித்து அவதூறாகப் பேசுவதிலும் முடிந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, வடகிழக்கு மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் கண்டனத்திற்கும் உள்ளானது. தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஹர்ஷ் சிங், ஆத்திரத்தில் வார்த்தைகள் தடிப்விட்டதாகவும், தனது செயலுக்காக தான் மிகவும் வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
“>விவகாரத்தில் அதிரடி திருப்பம்!
இந்நிலையில் வடகிழக்கு மாநில மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள அவர், டெல்லி காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் பலரும் இது உண்மையான மன்னிப்பு அல்ல என்றும், சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எடுக்கப்படும் முயற்சி என்றும் விமர்சித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.…
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த கோமல் மிஸ்ரா (20) என்ற பெண் அழகுக்கலைஞர், தமக்கு ஏற்பட்ட தொடர்…
உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்குப் பொறித்த உணவுகள் என்றால் மிகவும்…
பெங்களூருவின் சல்லகட்டா பகுதியில் வசித்து வந்த 61 வயதான ஜெயம்மா என்ற மூதாட்டி, கடந்த ஜூலை 15 முதல் காணாமல்…
தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி)…
காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் உருவாகி, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…