தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. நடிகராக மட்டுமின்றி, தீவிர அரசியலிலும் களம் கண்டுள்ள விஜய்யின் திரைப்படம் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிக உச்சத்தில் இருந்தது.
திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பல நாட்களுக்கு முன்பே திரையரங்குக் கட்டணத்தைச் செலுத்தி, ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தங்களது இருக்கைகளை உறுதி செய்திருந்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு திடீரென கூடுதல் தொகை செலுத்துமாறு திரையரங்க நிர்வாகம் சார்பில் தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்ததால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள், கூடுதல் கட்டணம் கேட்டதால் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இந்தத் திடீர் அறிவிப்பால் பெரும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய நாடாளுமன்றத்தை…
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…
சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…