முதலமைச்சர் விஜய்யின் தீவிர அரசியல் நுழைவுக்கு முன்பான கடைசிப் படமான ‘ஜனநாயகன்’, தணிக்கைக் குழுப் பிரச்சினைகளால் தாமதமாகி, கடுமையான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நள்ளிரவு முதலே திரையரங்கு வாசல்களில் குவிந்த ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும் கட்-அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்பே இணையத்தில் கசிந்திருந்தாலும், வசூலில் எந்தப் பாதிப்பும் இன்றி, இந்தியாவில் மட்டும் சுமார் 9,500 காட்சிகளுடன் வெளியாகியுள்ள இத்திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ₹100 கோடி வரை ஈட்டும் எனத் திரையுலக வணிகர்கள் கணிக்கின்றனர்.
இந்தியளவில் முன்பதிவு மூலம் ₹20 கோடியும், சர்வதேச அளவில் ₹15 கோடியும் ஈட்டியுள்ள நிலையில், ‘தி கோட்’ படத்தின் முதல் நாள் இந்திய வசூல் சாதனையான ₹44 கோடியை இது முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வார இறுதி முடிவில் உலகம் முழுவதும் சுமார் ₹250 கோடி வரை வசூலிக்கும் எனக் கருதப்படுகிறது. ‘லியோ’ படத்தின் சாதனை வசூலை எட்டுவது சவாலாக இருந்தாலும், விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசிப் படம் என்பதால் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இத்திரைப்படம் புதிய மைல்கல்லை எட்டும் எனக் கூறப்படுகிறது.
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…
கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…
ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…
திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…
அதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை உணர்த்தும் வகையில் முக்கிய மூத்த தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன்…
ஓலைக்குடா அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள…