கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள அஸாகாவோ சந்திப்பில், வாடகைக்கு எடுக்கப்பட்ட மஹிந்திரா தார் வாகனம் ஒன்று ஹூண்டாய் i20 கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த 65 வயதான பகத்ராம் சர்மா என்ற சுற்றுலாப் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த அந்த காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஐந்து மாதக் குழந்தை எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியது. இந்த விபத்தின் போது தார் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள், தண்டனையிலிருந்து தப்பிக்க ஓட்டுநர் இருக்கையை மாற்ற முயன்றதாக நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களில், வாகனத்தில் இருந்த ஒரு இளைஞர் தனது தந்தையிடம் “அப்பா, நான் தான் அந்த சந்திப்பில் இருந்தேன்…” என்று பதற்றத்துடன் பேசுவது பதிவாகியுள்ளது.
மேலும் விபத்தின் போது ஒரு பெண்ணே வாகனத்தை ஓட்டியதாகவும், பின்னர் குற்றச்சாட்டை மாற்ற முயன்றதாகவும் கூறப்படும் நிலையில், கோவா போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஓட்டுநர் யார் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…