கோவை மாவட்ட அரசியல் களத்தில் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய திமுக முன்னாள் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட இவர், வெறும் 2,456 வாக்குகள் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்தில் தன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு மீண்டும் போட்டியிட திமுக தலைமை சீட் வழங்க மறுத்ததால், அதிருப்தியடைந்த சண்முகசுந்தரம் வட கோவை மாவட்ட திமுக பொறுப்பிலிருந்து விலகி மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேச்சையாகக் களம் கண்டார். இந்தத் தேர்தலில் அவர் தனித்து நின்று 26,766 வாக்குகளைப் பிரித்ததன் மூலம் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரின் தோல்விக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், கோவை மண்டலத்தில் வலுவான அடித்தளம் கொண்ட சண்முகசுந்தரத்தின் இந்த தவெக நோக்கிய வரவு, அப்பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் அரசியல் பலத்தையும், திமுகவிற்கு தற்காலிக பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) மீண்டும் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
இந்தியப் பெண்கள் தங்களின் பாரம்பரியச் சடங்குகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு விநோதமான நிகழ்வு…
தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும்…
ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான விவகாரம், கெனிஷா மற்றும் ஆர்த்தியின் அடுத்தடுத்த சமூக வலைதளப்…
ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான குடும்பப் பிரச்சனை தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத்…