“ஓடும் ரயிலில் இப்படியொரு பூஜையா?”… 3AC பெட்டியில் ஆலமரத்தை நட்டு பெண் செய்த காரியம்… இணையத்தில் விவாதத்தைக் கிளப்பிய வீடியோ…!!!

Spread the love

இந்தியப் பெண்கள் தங்களின் பாரம்பரியச் சடங்குகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு விநோதமான நிகழ்வு ரயிலில் நடந்துள்ளது. மம்தா அஸ்தானா என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காணொளியில், பெண் ஒருவர் ஓடும் ரயிலின் 3AC பெட்டிக்குள் வட் சாவித்திரி பூஜையை மிகவும் சிரத்தையுடன் செய்துள்ளார். ரயிலில் போதிய வசதிகள் இல்லாவிட்டாலும், சக பயணிகளுக்கு மத்தியில் அவர் இந்த மதச் சடங்கைக் கைவிடாமல் நடத்தியது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாட்டிலில் ஆலமரம் மற்றும் சடங்குகள்:

அந்த இன்ஸ்டாகிராம் காணொளியில், ரயிலின் இருக்கைகளுக்கு இடையே பயணிகள் கால் வைக்கும் சிறிய இடைவெளியில் பூஜைக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு செய்தித்தாளைத் தரையில் விரித்து, அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து, அதற்குள் ஒரு சிறிய ஆலமரக் கிளையை நட்டு வைத்திருந்தனர். திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக ஆலமரத்தைச் சுற்றி வந்து நூல் கட்டும் இந்தச் சடங்கை, அந்தப் பெண் ஓடும் ரயிலுக்குள்ளேயே அந்தப் பாட்டிலைச் சுற்றி வந்து நிறைவேற்றியுள்ளார். இந்த அசாதாரண சடங்கிற்கு அவரது குடும்பத்தினரும் அருகில் இருந்து உதவி செய்துள்ளனர்.

நெட்டிசன்களின் காரசார விவாதம்:

ரயிலில் பூஜை செய்வது பொதுப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிரானது என்பது கூடத் தெரியாமல் அல்லது அதைப் பொருட்படுத்தாமல் செய்யப்பட்ட இந்தச் செயலுக்கு இணையவாசிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. ஒரு தரப்பினர், “இது பக்தி அல்ல, பொது இடத்தில் செய்யப்படும் அநாவசியமான நாடகம்” என்றும், “பூஜை என்ற பெயரில் கேலி செய்யப்பட்டுள்ளது” என்றும் விமர்சித்துள்ளனர். எனினும், மற்றொரு தரப்பினரோ, “பூஜை செய்ய வேண்டும் என்ற அவர்களின் தூய்மையான நம்பிக்கையையும், பாரம்பரியத்தின் மீதான பற்றையும் நாம் பாராட்ட வேண்டும்” எனப் பெண்ணின் செயலுக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

அடேயப்பா..! ரூ.1 லட்சம்… இப்போ ரூ.14 கோடி.. 24 வருஷத்துல லைஃபே செட்டிலான மேஜிக் பங்கு எது தெரியுமா?

பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் செய்யப்படும் முதலீடு மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கும் என்பதற்கு 'இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்' நிறுவனம் ஒரு…

11 minutes ago

“அவன் ஒரு போலியான ஆள்..!” நடிகர் சூரியின் முகத்திரையைக் கிழித்த உயிர் நண்பன்… பின்னணியில் இவ்வளவு துரோகமா?… உச்சக்கட்ட அதிர்ச்சியில் கோலிவுட்…!!!

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சூரி தனக்குத் திரைத்துறையில் தொடக்க காலத்தில் உதவிய நண்பர்களைப் பேட்டிகளில் பெருமையாகப் பேசி,…

19 minutes ago

வாரணாசியில் அதிரடி.. காசி விஸ்வநாத் கோயில் சாலை விரிவாக்கத்திற்காக 6 மசூதிகள் இடமாற்றம் – 187 சொத்துக்கள் பாதிப்பு..!!

வாரணாசியில் உள்ள லஹுராபீர்-கோதௌலியா பாதையிலிருந்து புகழ்பெற்ற காசி விஸ்வநாத் கோயிலின் 4-வது நுழைவாயில் வரை மக்கள் எளிதாகச் சென்று வர…

21 minutes ago

“காங்கிரஸ், விசிகவுக்கு அந்த மேஜர் துறைகளா?”… கூட்டணிக்கு 8 இடங்கள்… கசிந்தது புதிய அமைச்சரவை லிஸ்ட்.. கோட்டையை அதிரவைத்த முதல்வர் விஜய்…!!!

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த 3 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் முழு…

30 minutes ago

“வாழ்க்கைப் போரில் தோற்றுவிட்டேன்… என் மனைவிதான் காரணம்”: கோரக்பூர் காட்டில் தூக்கில் தொங்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் – வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தனது மனைவியின் தொடர் கொடுமைகளால் மனமுடைந்த பிரத்யும்ன் யாதவ் (33) என்ற மென்பொருள் பொறியாளர்,…

30 minutes ago

எம்.எல்.ஏ குடும்பத்திற்கே இந்த நிலையா? அதிகாலை வாக்கிங் சென்றபோது பாய்ந்து வந்த பைக் ஆசாமிகள்: சிசிடிவியில் சிக்கிய சங்கிலி பறிப்பு பகீர் காட்சிகள்..!

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கபாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் காட்டும்…

31 minutes ago