“கொரியன் பாய் பிரண்ட்.. மாசம் ஒரு வெளிநாட்டு டூர்!”… மேடையிலேயே பெற்றோருக்கு வெடிகுண்டு வைத்த இளம்பெண்… ஆவுடையப்பனை அதிர வைத்த பதில்…!!!

Spread the love

தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் உள்ளது. இதே போன்று மற்றொரு பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ‘தமிழா தமிழா’ என்ற ரியாலிட்டி விவாத நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது இதனை பிரபல ஊடகவியலாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் வாரந்தோறும் சமூகத்திற்குத் தேவையான சுவாரஸ்யமான ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வாரம் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் “காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிள்ளைகள் மற்றும் பயத்தில் பெற்றோர்கள்” என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்படுகிறது. இதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, தங்களுக்குள் காதல் திருமணம் செய்து கொண்ட சில பெற்றோர்களே, தற்போது தங்களது பிள்ளைகளின் காதல் திருமண முடிவுக்கு எதிராக விவாதித்து பயத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், பிள்ளைகளோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், தாங்கள் பிடிவாதமாகத் தான் விரும்பியவரையே காதல் திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோர்களுக்கு இணையாக மேடையில் வாதிடுகின்றனர்.

இந்த விவாதத்தின் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர், தான் ஒரு கொரியன் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலிப்பதாகக் கூறி அரங்கத்தையே அதிர வைத்தார். மேலும், அவர் தனது காதலருடன் மாதம் ஒருமுறை வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்று வருவதாகவும் வெளிப்படையாகப் பேசினார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த தொகுப்பாளர் ஆவுடையப்பன், அந்தப் பெண்ணின் துணிச்சலான பதிலைக் கையாண்டு, “இங்கு இருக்கிற இந்திய பெற்றோருக்குப் பெரிய வெடிகுண்டை வீசுறியேமா!” என்று நகைச்சுவையாகவும் வியப்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Muthu Mani

Recent Posts

அடேயப்பா..! ரூ.1 லட்சம்… இப்போ ரூ.14 கோடி.. 24 வருஷத்துல லைஃபே செட்டிலான மேஜிக் பங்கு எது தெரியுமா?

பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் செய்யப்படும் முதலீடு மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கும் என்பதற்கு 'இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்' நிறுவனம் ஒரு…

11 minutes ago

“அவன் ஒரு போலியான ஆள்..!” நடிகர் சூரியின் முகத்திரையைக் கிழித்த உயிர் நண்பன்… பின்னணியில் இவ்வளவு துரோகமா?… உச்சக்கட்ட அதிர்ச்சியில் கோலிவுட்…!!!

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சூரி தனக்குத் திரைத்துறையில் தொடக்க காலத்தில் உதவிய நண்பர்களைப் பேட்டிகளில் பெருமையாகப் பேசி,…

19 minutes ago

வாரணாசியில் அதிரடி.. காசி விஸ்வநாத் கோயில் சாலை விரிவாக்கத்திற்காக 6 மசூதிகள் இடமாற்றம் – 187 சொத்துக்கள் பாதிப்பு..!!

வாரணாசியில் உள்ள லஹுராபீர்-கோதௌலியா பாதையிலிருந்து புகழ்பெற்ற காசி விஸ்வநாத் கோயிலின் 4-வது நுழைவாயில் வரை மக்கள் எளிதாகச் சென்று வர…

21 minutes ago

“காங்கிரஸ், விசிகவுக்கு அந்த மேஜர் துறைகளா?”… கூட்டணிக்கு 8 இடங்கள்… கசிந்தது புதிய அமைச்சரவை லிஸ்ட்.. கோட்டையை அதிரவைத்த முதல்வர் விஜய்…!!!

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த 3 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் முழு…

29 minutes ago

“வாழ்க்கைப் போரில் தோற்றுவிட்டேன்… என் மனைவிதான் காரணம்”: கோரக்பூர் காட்டில் தூக்கில் தொங்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் – வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தனது மனைவியின் தொடர் கொடுமைகளால் மனமுடைந்த பிரத்யும்ன் யாதவ் (33) என்ற மென்பொருள் பொறியாளர்,…

30 minutes ago

எம்.எல்.ஏ குடும்பத்திற்கே இந்த நிலையா? அதிகாலை வாக்கிங் சென்றபோது பாய்ந்து வந்த பைக் ஆசாமிகள்: சிசிடிவியில் சிக்கிய சங்கிலி பறிப்பு பகீர் காட்சிகள்..!

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கபாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் காட்டும்…

31 minutes ago