“உன்னால் என் குடும்பமே போச்சு!”… கள்ளக்காதலால் மாறி மாறி அடித்து கொண்ட மனைவிகள்…. அரூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்….!

Spread the love

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரது மகன் ஸ்ரீவெங்கடேஷ் (32). திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவி கீதாவுடன்  ஸ்ரீவெங்கடேஷிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் ஸ்ரீவெங்கடேஷின் மனைவி யமுனாவிற்கு தெரியவந்ததையடுத்து, குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கியது. கணவரின் செல்போன் குறுஞ்செய்திகளைப் பார்த்த யமுனா, இதுகுறித்து கீதாவிடம் நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளார். இதனால் இரு பெண்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலின் போது, கீதாவின் தரப்பினர் யமுனாவைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த யமுனா, நடந்தவற்றைத் தனது கணவர் இளவரசனிடம் தெரிவித்துள்ளார்.

மனைவி அளித்த தகவலால் ஆத்திரமடைந்த இளவரசன், கடந்த நேற்று முன்தினம் ஸ்ரீவெங்கடேஷின் வீட்டிற்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீவெங்கடேஷின் பின் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் இளவரசன் சராமாரியாகக் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க வந்த உறவினர் ஜலபதி என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஸ்ரீவெங்கடேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காயமடைந்த ஜலபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த இளவரசனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

1 minute ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

8 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

28 minutes ago

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

32 minutes ago

என்ன கில்..! இப்படி இருக்க…? பகை மறந்து பாசம் காட்டிய கேப்டன்கள்.. ஷுப்மன் கில்லின் தாடியை மேடையில் வைத்தே கலாய்த்த ஹர்திக் பாண்டியா வைரல் வீடியோ..!

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…

35 minutes ago

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

1 மணத்தியாலம் ago