“உன்னால் என் குடும்பமே போச்சு!”… கள்ளக்காதலால் மாறி மாறி அடித்து கொண்ட மனைவிகள்…. அரூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்….!

Spread the love

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரது மகன் ஸ்ரீவெங்கடேஷ் (32). திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவி கீதாவுடன்  ஸ்ரீவெங்கடேஷிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் ஸ்ரீவெங்கடேஷின் மனைவி யமுனாவிற்கு தெரியவந்ததையடுத்து, குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கியது. கணவரின் செல்போன் குறுஞ்செய்திகளைப் பார்த்த யமுனா, இதுகுறித்து கீதாவிடம் நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளார். இதனால் இரு பெண்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலின் போது, கீதாவின் தரப்பினர் யமுனாவைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த யமுனா, நடந்தவற்றைத் தனது கணவர் இளவரசனிடம் தெரிவித்துள்ளார்.

மனைவி அளித்த தகவலால் ஆத்திரமடைந்த இளவரசன், கடந்த நேற்று முன்தினம் ஸ்ரீவெங்கடேஷின் வீட்டிற்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீவெங்கடேஷின் பின் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் இளவரசன் சராமாரியாகக் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க வந்த உறவினர் ஜலபதி என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஸ்ரீவெங்கடேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காயமடைந்த ஜலபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த இளவரசனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago