“உன்னால் என் குடும்பமே போச்சு!”… கள்ளக்காதலால் மாறி மாறி அடித்து கொண்ட மனைவிகள்…. அரூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்….!

Spread the love

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரது மகன் ஸ்ரீவெங்கடேஷ் (32). திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவி கீதாவுடன்  ஸ்ரீவெங்கடேஷிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் ஸ்ரீவெங்கடேஷின் மனைவி யமுனாவிற்கு தெரியவந்ததையடுத்து, குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கியது. கணவரின் செல்போன் குறுஞ்செய்திகளைப் பார்த்த யமுனா, இதுகுறித்து கீதாவிடம் நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளார். இதனால் இரு பெண்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலின் போது, கீதாவின் தரப்பினர் யமுனாவைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த யமுனா, நடந்தவற்றைத் தனது கணவர் இளவரசனிடம் தெரிவித்துள்ளார்.

மனைவி அளித்த தகவலால் ஆத்திரமடைந்த இளவரசன், கடந்த நேற்று முன்தினம் ஸ்ரீவெங்கடேஷின் வீட்டிற்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீவெங்கடேஷின் பின் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் இளவரசன் சராமாரியாகக் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க வந்த உறவினர் ஜலபதி என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஸ்ரீவெங்கடேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காயமடைந்த ஜலபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த இளவரசனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

சீச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? கால்களால் மிதித்து மாவு பிசையும் தொழிலாளர்கள்…. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ…!!

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…

2 minutes ago

“தவெகவில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?”… கொளுத்திப் போட்ட செங்கோட்டையன்… குதிரை பேரம் நடப்பது உண்மை தானா?… போட்டுத் தாக்கிய விசிக….!

தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…

16 minutes ago

அம்மாடியோ பார்க்கவே பயமா இருக்கு…! “20 குடும்பங்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம்…” 7 மாடி கட்டிடம் அதிரடி இடிப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…

23 minutes ago

BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தல் ரத்து?…. சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…..!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…

23 minutes ago

அவரு சட்டை போடல..! கல்யாணத்தில் நடந்த செம காமெடி… டிக்டாக்கை தெறிக்கவிடும் கலிபோர்னியா கல்யாண வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…

23 minutes ago

பரந்தூரை கை விட்டுவிட்டீங்க… அதுக்கு பதிலா 5,500 ஏக்கரில் விமான நிலையமா?…. கொந்தளித்த அண்ணாமலை… CM விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி…!

சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…

28 minutes ago