#image_title
அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். புவியன் தென்முனையில் அமைந்திருப்பதால் இந்த கண்டத்திற்கு சூரியனின் வெப்பம் மிக குறைவான அளவில் கிடைக்கும். இதனால் இந்த கண்டம் முழுவதும் பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது.
தற்போது சமீப வருடமாக புவி வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகா பனிகள் உருகி வருவதாகவும் இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவது ஆபத்தானது என்று கடந்த சில வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வந்தனர். கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பனிக்கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகிறதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் அண்டார்டிகாவின் பெரும் பகுதி பனியால் மூடப்பட்டிருந்தாலும் பசுமையான தோற்றத்துடன் பாசிகள் வளர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே விஞ்ஞானிகள் அண்டார்டிக் தீபகற்பத்தில் வளர்ந்து வரும் தாவரங்களை ஆய்வு செய்து வந்தனர்.
கடந்த 40 ஆண்டுகளில் பாசிகள் வளர்வது அண்டார்டிகாவில் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர். 1986 ஆம் ஆண்டில் தாவரங்கள் தீபகற்பத்தில் 0.4 சதுர மையில்களுக்கு குறைவாகவே இருந்தன. ஆனால் தற்போது கிட்டத்தட்ட ஐந்து சதுர மையில்களுக்கு மேலாக இது வளர்ந்திருக்கிறது. இது புவி தீவிரமாக வெப்பமடைந்து வருவதை குறிக்கிறது.
இப்படி தாவரங்கள் தொடர்ந்து வளரும்போது பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டத்தை அதிகப்படுத்தும். இது மனித இனத்தின் அழிவிற்கு வழிவகுக்கும் பூமியின் அதிக வெப்பமயமாதல் காரணமாக பல பேரிடர்கள் ஏற்படலாம். இது நமக்கு ஒரு எச்சரிக்கை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…
ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…
ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…
தன் சொற்ப வருமானத்திலும் கருணை உள்ளத்தோடு ஐந்து தெரு நாய்களை அரவணைத்துச் செல்லும் ஒரு முதியவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக…
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வழங்கும் இந்த ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், சாமானிய மக்களும் சிறுகச் சிறுகச்…