சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள பொது ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராவை எடுத்து நக்கிவிட்டு, மீண்டும் அதை அதே இடத்தில் வைத்துள்ளார். மேலும், இந்த அருவருப்பான செயலை வீடியோவாகப் பதிவு செய்து அவர் இணையத்திலும் பதிவிட்டுள்ளார். சுகாதாரப் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த விவகாரம் பொதுமக்களிடையே கடுமையான கண்டனங்களை எழுப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த இயந்திரத்தில் இருந்த அனைத்து ஸ்ட்ராக்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
இந்தத் தகாத செயலைத் தொடர்ந்து, அந்த மாணவர் மீது பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்தல் மற்றும் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிங்கப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்குச் சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக 6 மாதச் சிறையும், சேதம் விளைவித்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அவருக்குக் கிடைக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…