பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் பகுதியில், பெண் உதவி ஆய்வாளர் (ASI) ஒருவர் தனது சொந்த 5 வயது பேத்தியை மிகக் கொடூரமான முறையில் தண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளுத்தும் வெயிலில், அந்தச் சிறுமியின் கை, கால்களைத் துணியால் கட்டி, வீட்டின் வெளிப்பக்க இரும்பு கேட்டில் தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளார்.
அந்தக் குழந்தையின் பெற்றோர் தற்போது போர்ச்சுகல் நாட்டில் வசித்து வரும் நிலையில், சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். வெயிலின் கொடுமை தாளாமல் அந்தச் சிறுமி கதறி அழுத சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது இந்த அவலம் தெரியவந்தது. உடனடியாக ஓடிச் சென்ற அண்டை வீட்டார், கேட்டில் கட்டப்பட்டிருந்த சிறுமியை மீட்டுத் தரைக்குக் கொண்டு வந்தனர்.
பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையில் இருக்கும் ஒருவரே, ஒரு பச்சிளம் குழந்தையிடம் இவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் அதிகாரி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…