தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு ஏதுவாக இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை தமிழக அரசானது செயல்படுத்தி வருகிறது. இந்த பஸ் பாஸ் வழங்கும் திட்டமானது 1996–97ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆட்சிகளிலும் இத்திட்டம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது. இதனால் மாணவர்களுக்கு விரைந்து இலவச பஸ் பாஸ் வழங்க ஏதுவாக எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்கள் விவரங்களை சரிபார்த்து அனுப்பும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இலவச பஸ் பாஸ் இந்தாண்டில் எமிஸ் தளத்தில் உள்ள விவரம் மூலமே வழங்கப்பட இருப்பதாகவும், அதற்கான பணி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…