#image_title
தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார்.
அப்படி திறமையும் இளமையுமாக இருந்த கௌதம் மேனனை தன்னை ஒரு படத்தில் இயக்க அமர்த்தினார். முதலில் கமல்ஹாசன் தசாவதாரம் கதையைதான் கௌதமை இயக்க அழைத்துள்ளார். ஆனால் அந்த கதை தனக்கு ஒத்து வராது என்பதால் கௌதம் விலகிக் கொள்ளவே அவர் கதையில் கமல் நடித்த படம்தான் வேட்டையாடு விளையாடு.
இந்த படம் பல தடங்கல்களைத் தாண்டி 2 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்து ஒருவழியாக 2006 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனபின்னர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கமல்ஹாசனின் ரசிகரான கௌதம் மேனன், அவரை செதுக்கி ரசிகர்கள் கொண்டாடும் விதமாகக் காட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் வந்த தனித்துவமுள்ள ஸ்டைலிஷான போலீஸ் படங்களில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்துக்கு எப்போது முதலிடம் உண்டு.
#image_title
இந்த படத்தில் இன்றளவும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடும் காட்சிகளில் ஒன்று கமல்ஹாசனின் அறிமுகக் காட்சி. அந்த காட்சி பற்றி ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் கௌதம் மேனன் பேசினார். அப்போது “ நான் ஒரு ரசிகராக வேட்டையாடு விளையாடு படத்தை எடுத்தேன். அந்த அறிமுகக் காட்சியில் கண்ணைத் துருத்தி காட்டுவதெல்லாம் நான் சொல்லவேயில்லை. அதைக் கமல் சார் ஸ்பாட்டில் அவராகவே செய்தார். அதை அப்படியே நாங்கள் கேமராவில் பதிவு செய்தோம். இன்றளவும் அது கொண்டாடப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்ற கத்திகுத்துச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல்…
பெங்களூரு பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் - பிரியா தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…
பெங்களூரு அபிகெரே பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி, ஒரு இஸ்லாமிய இளைஞரை நோக்கி இனவெறி மற்றும்…
தேர்தல் களத்தில் ஜனநாயகத்தின் நேர்மையை நிலைநாட்டும் ஒரு வலிமையான அறிவியல் ஆயுதமாக இந்த "அழியாத மை" (Indelible Ink) திகழ்கிறது.…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…
தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…