பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண், ரேஷ்மா மற்றும் நஷ்ரத் என்பவர்களிடம் கடன் வாங்கியிருந்தார். நிதி நெருக்கடி காரணமாகக் கடந்த சில மாதங்களாக வட்டி மற்றும் அசல் தொகையைத் திரும்பக் செலுத்த முடியாமல் வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வேலை தருவதாக கூறி சகுந்தலாவை வரவழைத்த நஷ்ரத், ரேஷ்மா மற்றும் அவரது கணவர் சுஹைல் அடங்கிய கும்பல், அவரைப் பலவந்தமாக ஆட்டோவில் கடத்திச் சென்று பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள அறையில் அடைத்து வைத்தது. அங்கு அவரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்து வீடியோ எடுத்துக்கொண்ட அந்த கும்பல், வட்டியோடு சேர்த்து ரூ.11 லட்சம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளது. மேலும் ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்று வெற்றுப் பேப்பரிலும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
சகுந்தலாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், சகுந்தலாவை பத்திரமாக மீட்டதுடன், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட ரேஷ்மா, நஷ்ரத், சுஹைல் உட்பட 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…