அயர்லாந்து பாதுகாப்புப் படையில் பணியாற்றிய பெண் ராணுவ வீராங்கனை ஒருவர், தனக்கு 19 வயதாக இருந்தபோது சக வீரர்களாலேயே படுக்கையறையில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக ராணுவத் தீர்ப்பாயத்தில் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். 90-களின் காலகட்டத்தில் நள்ளிரவில் ராணுவ முகாமின் குடியிருப்பில் தான் தூங்கிக் கொண்டிருந்தபோது, கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த 2 அல்லது 3 வீரர்கள் தன் ஆடைகளைக் களைந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக அவர் விவரித்துள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலின் காரணமாகத் தான் கர்ப்பமடைந்ததாகவும், பின்னர் வேறு வழியின்றி கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் அந்தப் பெண் தீர்ப்பாயத்தில் வாக்குமூலம் அளிக்கும் போது உடைந்து அழுதுள்ளார். இக்கொடுமை குறித்து வெளியில் எவரிடமாவது புகாரளித்தால், ராணுவப் பணியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவாய் என சக வீரர்கள் தன்னை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். தான் எப்போதும் விரும்பிய ராணுவ வேலையை இழந்துவிடுவோமோ என்ற பயத்தாலும், பழிவாங்குவார்கள் என்ற அச்சத்தாலும் இத்தனை காலம் இதனைப் பற்றிப் புகார் அளிக்கவில்லை என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
ராணுவத் தீர்ப்பாயத்தின் விதிகளின்படி குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் குறித்துப் பேசிய அந்தப் பெண், ராணுவப் படைகளுக்குள் நடக்கும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்குக் கையாள்வதற்கும், படையின் முன்னாள் உறுப்பினர்கள் யாரும் இல்லாத ஒரு முற்றிலும் சுதந்திரமான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனையின் இந்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் தற்போதைய ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…