Connect with us

VIDEOS

என்னப்பா இது…. யானைக்கு கண் வரைய சொன்னா?…. எங்கெங்கயோ வரையுறீங்க…. கலை கட்டிய பொங்கல் போட்டி…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிராமத்தில் யானைக்கு கண் வரையும் போட்டி நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

தொடர்ந்து தற்போது தான் பொங்கல் பண்டிகை முடிந்தது. பொதுவாக காணும் பொங்கலை முன்னிட்டு கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகையை பொறுத்தவரையில் விளையாட்டுகள் நடக்கும். திருவிழா போன்று கலைகட்டி இருக்கும். குழந்தைகளுக்கு பாட்டில் நிரப்பும் போட்டி, சைக்கிள் போட்டி, பிஸ்கட் கவ்வும் போட்டி, ஓட்ட போட்டி என்று பல போட்டிகள் நடத்துவார்கள்.

அதே போல பெரியவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர் என்று விதவிதமாக போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவார்கள். அந்த வகையில் தற்போது ஒரு கிராமத்தில் போட்டி நடத்தியுள்ளார்கள். அதாவது யானைக்கு கண் வரையும் போட்டி. இதில் பல பெண்கள் கலந்து கொண்டு யானைக்கு கண் வரைந்தனர். இது பார்ப்பதற்கு மிகவும் சிரிப்பாக இருந்தது.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top