கலிபோர்னியாவில் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக தந்தையிடம் மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்ஸாண்டர் பினோன் என்ற வாலிபர் காலமாகியுள்ளார். அவருடைய பெற்றோர்கள் சான் ஜோசில் உள்ள தேவாலயத்தில் அலெக்சாண்டர் இன் இறுதிச் சடங்கை நடத்தியுள்ளனர். இறுதி சடங்கு நடத்தும் குழுவிடம் தன்னுடைய மகன் இறந்தபோது போட்டிருந்த உடைகளை மாற்றிவிட்டு புதிய உடைகளை போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த உடையை தங்களிடம் தாருங்கள் என்று பெற்றோர் கேட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இறுதி சடங்கை வழி நடத்திய அனிதா சிங் என்பவர் அலெக்சாண்டர் தந்தையிடம் துணி இருக்கும் ஒரு பையை கொடுத்துள்ளார். அவர் அந்தப் பையை வீட்டுக்கு எடுத்துச் சென்று துணிகளுடன் துவைக்கப்பட்டுள்ளார். அப்போது அந்தப் பையில் இருந்து மூளை ஒன்று வெளிவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த மூளையை அந்த பையில் போட்டு அனிதா சிங்கிடம் கொடுத்தார். பையைப் பெற்றுக் கொண்ட அவர், மன்னிப்பு கேட்கவோ அது யாருடைய மூளை என்பது குறித்த எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
மேலும் அலெக்சாண்டரின் மூளையை ஒரு பாக்ஸில் போட்டு இறுதி சடங்கு இல்லத்தின் வாசலில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இரண்டரை மாதங்களுக்கு பிறகு அந்த மூளை அழுகிய துர்நாற்றம் வீசிய நிலையில் சில வாரங்களுக்கு பிறகு இறுதி சடங்கு இல்லத்திலிருந்து அலெக்சாண்டர் தந்தையை அழைத்து அது அலெக்சாண்டரின் மூளை தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது விசாரணை நடைபெற்ற வருகிறது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…