இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில், “வெற்றி நிச்சயம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளின் தேவைக்கேற்ப, பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். தற்போது, “5ஜி கம்யூனிகேஷன்” தொழில்நுட்பத்திற்கான சான்றிதழ் பயிற்சி தொடங்கப்படுகிறது. Cultus என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) இந்த பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியில் உதவித்தொகை மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். இப்பயிற்சி 4000 இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன. 18 வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், 70% நேரடி வகுப்பும், 30 % ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும்.
இப்பயிற்சியில் கற்பிக்கப்படும் திறன்கள் பின்வருமாறு,
இந்தப் பயிற்சியை முழுமையாக முடிப்பவர்கள் 5G RAN பொறியாளர், Protocol Stack Developer, RF Testing பொறியாளர்,போன்ற முன்னணி பதவிகளில் பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
இதில் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.
விண்ணப்பிக்கும் தகுதியுள்ளவர்கள் :
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களில் இந்த இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/41 என்ற வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற…
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் சோழவந்தன் தொகுதி எம்எல்ஏவான…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற கையோடு மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகக்…
தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய நகர்வாக, சோழவந்தான் தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவைத் தமிழகச் சட்டமன்றத்தின் தற்காலிக…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அதிரடி நடவடிக்கைகளைத்…