இளம்பெண்களை காதல் மொழி பேசி ஏமாற்றி கூகுள்பே மூலம் ரூ. 20 லட்சம் வரை அபகரித்து மோசடி செய்த சென்னை வாலிபர் – கைது செய்த திண்டிவனம் போலீசார்!

Spread the love

இளம்பெண்களை ஏமாற்றி கூகுள்பே மூலம் 20 லட்சம் வரை சுருட்டிய காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர். டாக்டர் இன்ஜினியர் என ஏமாற்றி திருமணம் செய்வதாக மோசடி செய்த வாலிபர் வசமாக சிக்கினார். இதுவரை 20 பெண்களிடம் 20 லட்சம் ரூபாய் வரை பறித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. திருமண தகவல் மையம் மூலமாக பல பெண்களை தொடர்பு கொண்டு டாக்டர் இன்ஜினியர் என பொய் பேசி ஏமாற்றியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமண தகவல் மையம் மூலமாக பதிவு செய்திருக்கிறார். அப்போது சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த அருள்மொழி என்ற இளைஞர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்ட நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை அந்தப் பெண்ணிடம் கூகுள் பே மூலம் அருள்மொழி பெற்றிருக்கிறார்.

ஆனால் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்யாமல் பல நாட்களாக ஏமாற்றி வந்திருக்கிறார். இதுகுறித்து அந்த இளம் பெண் திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அந்த இளைஞரை கைது செய்தனர். அப்போதுதான் அவர் டாக்டர் இன்ஜினியர் என்று சொல்லி திருமண தகவல் மையம் மூலமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் வரை பறித்தது தெரிய வந்தது.

இவர் பெண்களிடம் காதல் மொழி பேசிப் பழகி பணத்தைப் பறித்துக் கொண்டு நாளடைவில் அவர்களை ஏமாற்றி விடுவதும் தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம் பெண்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மோசடி நபர்களிடம் ஏமாறக் கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Elango

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

6 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 மணத்தியாலங்கள் ago