கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் அதிகாலை நேரத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 2.15 மணியளவில் மாலூர் தாலுகா அருகே உள்ள கிராமத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. காரில் பயணித்த நண்பர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதிவேகமாக கார் ஓட்டி சென்றதை விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
அதிவேகமாக வந்த கார் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பில் மோதியதில் கார் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் பாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் காரில் இருந்த நான்கு ஐயப்ப பக்தர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த வாரம் திருப்பூரில் பெங்களூரில் இருந்து கேரளா சென்ற ஆம்னி பேருந்து விபத்தில் 37 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…