பெங்களூருவில் தினமும் 4 பைக்குகளைத் திருட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்த நான்கு பேர் கொண்ட பலத்த கொள்ளைக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்கள் குறிப்பாக ‘ஸ்ப்ளெண்டர்’ ரக மோட்டார் சைக்கிள்களை மட்டுமே கள்ளச்சாவி மூலம் சில நொடிகளில் திருடுவதில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.
பெங்களூருவின் கே.ஆர்.புரம் பகுதியில் தொடர்ச்சியாக நடந்த வாகனத் திருட்டுப் புகார்களை அடுத்து தனிப்படை அமைத்துத் தேடிய போலீசார், வேலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் பதுங்கியிருந்த ரஞ்சித், யுவராஜ் உள்ளிட்ட நால்வரைப் பிடித்துள்ளனர். திருடப்பட்ட வாகனங்களை இவர்கள் தமிழகத்தின் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திராவின் மலைக் கிராமங்களுக்குக் கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
குறிப்பாக ‘புஷ்பா’ திரைப்படப் படப்பிடிப்பு நடந்த கரடுமுரடான மலைப் பகுதிகளுக்கு ஏற்ற வாகனம் என்பதால், அங்குள்ள மக்களிடம் இவற்றை எளிதாக விற்பனை செய்துள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 60 பைக்குகளைப் பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகள் மூவரைத் தேடி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று…
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மீண்டும் போராட்டக்…