மும்பையில் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர் ஒருவருக்கு வெளிநாட்டு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான ‘கிரிஸ் டிராவல்ஸ்’ (Cris Travelss) என்பவர் பணம் கொடுத்த சம்பவம், அங்கிருந்த மற்றொரு பெண்மணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு கிரிஸ் முதலில் ரூ.100 வழங்கியபோது, அங்கு வந்த பெண் ஒருவர் தானும் மாற்றுத்திறனாளி என்றும், தனது மருத்துவச் செலவுகளுக்கும் உணவுக்கும் பணம் தேவைப்படுவதாகவும் கூறி கிரிஸிடம் முறையிட்டார். மேலும், போலியோவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் தினமும் பிச்சை எடுத்து ரூ.2,000 வரை சம்பாதிப்பதாக குற்றஞ்சாட்டிய அந்தப் பெண், கிரிஸின் உதவியை விமர்சித்தார்.
https://www.instagram.com/reel/DcIwS8EMXYV/?utm_source=ig_embed&ig_rid=A6nsGYqUzVRLJcBPmu7RR1T
இருப்பினும், அந்த நபரின் மோசமான உடல்நிலையைக் சுட்டிக்காட்டிய கிரிஸ், தனது முடிவை உறுதியுடன் நியாயப்படுத்தினார். அந்தப் பெண்ணின் சூழ்நிலைக்கும் தான் உதவத் தயாராக இருப்பதாகக் கூறியவர், ஊனமுற்ற நபருக்கு கூடுதலாக மேலும் ரூ.100 வழங்கி மொத்தம் ரூ.200 நிதியுதவி செய்தார். இச்சம்பவத்தின் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த கிரிஸ், அந்த நபருக்கு உண்மையிலேயே உதவி தேவைப்பட்டதாகத் தான் உணர்ந்ததாகக் குறிப்பிட்டு, “நீங்கள் இந்தச் சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றும் பயனர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…