ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை சீட்டுடன் இனி நீண்ட நேரம் நின்றால்… பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!

Spread the love

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதி சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்பவர்கள் மீது அபராதம் விதித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை பிரிவினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகர் மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. தினம்தோறும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருகிறார்கள்.

அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. சமீபகாலமாக வடமாநிலத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்டோரும் 60 வயதிற்கு மேற்பட்டோரும் ரயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் வீடுகளுக்கு தெரியாமல் வந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். அதில் 85 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளைத் தவிர பொதுமக்களும் தூங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. இவ்வாறு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையத்திற்குள் ரயிலில் பயணிப்பவர்கள் மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி உண்டு. எனவே நடைமேடை அனுமதிச்சீட்டை எடுத்து நீண்ட நேரம் தங்குவது விதியை மீறுவதாகும் என எச்சரித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

4 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

5 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

5 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

5 மணத்தியாலங்கள் ago