“பெற்றோர்களே உஷார்..! மாணவர்களுக்கு ₹50,000 நிதியுதவி…? வாட்ஸ்அப் மோசடி குறித்து தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை…!!”

Spread the love

தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ₹50,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாகக் கூறி, வாட்ஸ்அப் மூலம் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு பண மோசடி செய்யும் கும்பல் குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு அதிகாரிகள் போல நடிக்கும் இந்த மோசடிக்காரர்கள், ₹50,000 நிதியுதவியைப் பெற முதலில் ₹18,000 முன்பணமாகச் செலுத்த வேண்டும் என்றும், அத்தொகை பின்னர் திருப்பித் தரப்படும் என்றும் ஆசைவார்த்தை கூறுகின்றனர். பெற்றோர்களை நம்ப வைப்பதற்காக போலி ‘ஸ்கிரீன்ஷாட்’கள் மற்றும் கியூஆர் குறியீடுகளை அனுப்பி ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கல்வி உதவித்தொகை அல்லது நிதியுதவி வழங்குவதற்காக அரசு எப்போதும் எந்தவித முன்பணத்தையும் வசூலிப்பதில்லை என்று பள்ளிக் கல்வித் துறை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், அரசின் அதிகாரப்பூர்வத் திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் அரசு இணையதளங்கள், பள்ளி நிர்வாகங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலமாக மட்டுமே முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை நம்பி பெற்றோர் யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கி பள்ளிகள் வழக்கம்போல் நடைபெற்று வரும் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்த மோசடி அரங்கேறி வருகிறது. இது போன்ற சந்தேகத்திற்கிடமான தொடர்புகள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது காவல்துறையிடம் புகார் அளிக்குமாறும், தனிப்பட்ட வங்கித் தகவல்களைப் பகிர்வதற்கு முன் விழிப்புடன் சரிபார்க்குமாறும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய இணையவழி மோசடிகளைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க இணையக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Swetha

Recent Posts

செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… ஆளுநர் இன்னும் கையெழுத்து போடாத ரகசியம்… கோப்புகளை உடைத்த அமைச்சர் நிர்மல் குமார்…!

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி…

6 minutes ago

மதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு விழுந்த ரகசிய அழைப்பு… செங்கோட்டையன் கொடுத்த கிரீன் சிக்னல்… தமிழக அரசியலில் மாறும் மெகா கூட்டணி கணக்கு…!

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் மேடையாக மாறியுள்ளது. ஆளுநர் உரை முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து,…

16 minutes ago

அதிமுகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்… திமுகவுடன் நள்ளிரவில் ரகசிய டீல்…. கட்சி தாவும் 2 முக்கிய தலைகள்… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் பரபரப்புகளாலும், அடுத்தடுத்த கட்சித் தாவல் விவாதங்களாலும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்…

28 minutes ago

இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது?… ஜூன் 25-க்குள் இதைச் செய்யாவிட்டால் அவ்வளவுதான்… தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு….!

தமிழ்நாட்டில் ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து நீக்கவும் உணவுப்பொருள் வழங்கல் துறை பல்வேறு அதிரடி…

39 minutes ago

அம்மாடியோ.. நம்ப வேலைலாம் ஒண்ணுமே இல்ல… கேப் ஓட்டி மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இந்தியர்… மிரண்டு போன Zypp Electric சிஇஓ….!

ஒரு காலத்தில், குறைவான சம்பளமாக இருந்தாலும் மாதம் பிறந்தால் நிலையான வருமானம் தரும் அரசு அல்லது கார்ப்பரேட் வேலைகளே பாதுகாப்பான…

46 minutes ago

திடீர் திருப்பம்.. கொங்கு மண்டல காங்கிரஸ் ரகசியத்தை உடைத்து திமுகவில் ஐக்கியமான ஸ்ரீநிதி… காங்கிரஸில் நடந்த அந்த அக்கிரமம்…!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய இளைஞரணி…

56 minutes ago