“கேள்வி கேட்டா கரண்ட் வந்துருமா?”.. ட்ரோல்களுக்கு மாஸ்டர் மகேந்திரன் கொடுத்த நெத்தியடி விளக்கம்..!!

Spread the love

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘நாட்டாமை’ படத்தின் மூலம் 3 வயதில் அறிமுகமாகி, ஆறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சாதனை படைத்தவர் மகேந்திரன். தாய்க்குலமே தாய்க்குலமே, தேவி போன்ற படங்களுக்காக தமிழக அரசு மற்றும் நந்தி விருதுகளை வென்ற இவர், 2013-ல் விழா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து ‘மாஸ்டர் மகேந்திரன்’ என்று பரவலாக அறியப்பட்ட இவரது அண்மைக்கால பேட்டி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து அண்மையில் பேட்டி அளித்த மகேந்திரன், மின்சாரம் இல்லை என்றால் சோலார் சிஸ்டம் பயன்படுத்தியிருக்கலாம். இவ்வளவு காலம் மின்சாரப் பிரச்சினை இல்லாமல் ஜாலியாக இருந்துவிட்டு இப்போது கேள்வி கேட்கிறீர்களா? என்று பேசினார். மேலும், என் வீட்டில் உள்ள மின்சாரத்தை கூட எடுத்துக் கொள்ளுங்கள், கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? நீங்கள் கேள்வி கேட்பதை நிறுத்தினால் தான் பதில் கிடைக்கும் என்று அவர் பொதுமக்களை நோக்கிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா என்ற கேள்வியை நான் மக்களைப் பார்த்துக் கேட்கவில்லை; மின்சாரத்தை வைத்தும், மக்களின் உணர்ச்சிகளை வைத்தும் அரசியல் செய்பவர்களுக்கு எதிராகத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்” என்று கூறியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

அய்யோ அவமானம்..! உலகக்கோப்பை மேட்ச் பார்க்க குடும்பமே ஒண்ணா கூடினப்போ டிவியில் அந்த வீடியோ… மாட்டிட்டு முழித்த தாத்தாவின் அதிர்ச்சி வைரல் வீடியோ..!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…

29 seconds ago

அதிமுகவிலிருந்து நானாக வெளியேறவில்லை… அங்கே நடந்தது என்ன தெரியுமா..? உண்மையை உடைத்த ஓபிஎஸ்..!!

சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…

10 minutes ago

பகீர்..! “எனக்கு என் காதலனே முக்கியம்” 6 வயது மகன் கண்முன்னே தாய் செய்த காரியம்… கண்ணை மறைத்த கள்ளக்காதல்… துடிதுடித்து இறந்த தொழிலதிபர் கணவன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…

20 minutes ago

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா.? பிணத்தின் காதில் இருந்த கம்மலைத் திருடிய அரசு மருத்துவமனை ஊழியர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

29 minutes ago

மாஸ்கோ மீது 555 ட்ரோன்கள் வீச்சு… உக்ரைனின் மெகா தாக்குதலில் பற்றி எரிந்த ரஷ்யா… “இது நியாயமான பதிலடி” என ஜெலஸ்கி பதிவு..!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…

37 minutes ago

PM உஜ்வாலா 3.0: ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!!

மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…

50 minutes ago