#image_title
பிரபல நடிகையான பூஜா ஜேஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு அஜித்துடன் இணைந்து அட்டகாசம் படத்தில் நடித்தார். பூஜாவுக்கு ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு கிடைத்தது. உள்ளம் கேட்குமே திரைப்படத்தில் பூஜா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அந்த படத்தில் இடம்பெற்ற ஓ மனமே ஓ மனமே என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதனை தொடர்ந்து பட்டியல், தம்பி, தகப்பன்சாமி, பொறி, ஓரம்போ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பூஜா நடித்தார். கடைசியாக ஆர்யாவுடன் இணைந்து பூஜா நடித்த நான் கடவுள் படம் ஹிட்டானது.
அந்த படத்தில் கண் தெரியாத பெண்ணாக பிச்சை எடுக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். சமீபத்தில் பத்திரிக்கையாளரான கோடங்கி என்பவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, நான் கடவுள் படத்திற்கு பிறகு நடிகை பூஜா தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. அவர் என்னிடம் நிறைய பேசியிருக்கிறார்.
நிறைய விஷயங்களை கூறியிருக்கிறார். நான் கடவுள் படத்தில் நடித்த பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்தார். இயக்குனர் பாலா பற்றி நிறைய கூறியிருக்கிறார். நான் கடவுள் படத்தில் நடித்த பிறகு அவர் மன உளைச்சலால் வேறு எந்த சினிமா பக்கமும் வரவில்லை. பாலா போலவே மனிதர்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கும். எல்லாவற்றையும் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…
மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு,…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து…