திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் MMM என்ற தனியார் பேருந்தில் நேற்று இரவு 9 மணி அளவில் ஓட்டுநர் கணேசன் பயணிகளை கேன்வாஸ் செய்து ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கரூர் செல்வதற்கான பயணிகள் குறைவாக இருந்ததால் பேருந்து இருக்கைகளை நிரப்புவதற்காக ஜியபுரம் செல்லும் பெண்மணி ஒருவரை இருக்கையில் அமரச் சொல்லி ஓட்டுநர் கணேசன் கூறியுள்ளார். அதேசமயம் பேருந்துக்கு அருகில் கரூர் செல்லக்கூடிய மற்றொரு தனியார் பேருந்து இருந்தபோது MMM பேருந்தை விட மற்றொரு பேருந்து முன்னே செல்லும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் முன்னே செல்லும் பேருந்தில் செல்ல நினைத்த அந்த பெண்மணி பேருந்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இரண்டு பேருந்திலும் அமராமல் மாறி மாறி ஏறி இறங்கி கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த ஓட்டுநர் கணேசன், ஒன்று பேருந்தில் ஏறுமா, இல்லாவிட்டால் இறங்கி போய்விடும் என்று கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கும் ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்தப் பெண்மணி தன்னுடைய தொலைபேசியில் யாருக்கு போன் செய்து ஓட்டுனர் பற்றி கூறியுள்ளார்.
பிறகு நேரமானதால் ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். இதனைத் தொடர்ந்து பேருந்து சிறிது தூரம் சென்றதும் தனியார் பேருந்தை ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் வழிமறித்து உருட்டு கட்டைகள் மற்றும் கைகளால் ஓட்டுநரை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரௌடி கும்பலை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…