தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுவரை தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த திமுக, தற்போது முதல் முறையாகத் தோல்வி முகத்தை எதிர்கொள்கிறது. குறிப்பாகக் கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் பின்தங்கியுள்ளனர். கிருஷ்ணராயபுரத்தில் அதிமுக முன்னிலை வகிக்க, குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை பெற்று வருவதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான தவெகவினர், பட்டாசுகள் வெடிக்க முயன்றபோது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டாசு வெடிக்க போலீசார் தடை விதித்ததால் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, தவெகவினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…