மும்பையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளில் தீவிர மீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 6 உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகளின் உரிமங்களை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இடைநிறுத்தம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கஞ்சூர்மார்க், ஜோகேஸ்வரி மற்றும் முலுண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூச்சிக் கட்டுப்பாடு இன்மை, மோசமான சுகாதாரம், தகுந்த காற்றோட்டம் இல்லாத சமையலறை மற்றும் முறையற்ற உணவுச் சேமிப்பு ஆகியவை ஆய்வின் போது கண்டறியப்பட்டன. உதாரணமாக, ஒரு கடையில் ரவையில் எறும்புகள் இருந்ததும், இறைச்சிகள் மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில உணவகங்களில் சாக்கடை மற்றும் குப்பைகள் சமையல் பகுதிக்கு அருகிலேயே இருந்ததும், உணவு தயாரிக்கும் இடத்தில் தனிப்பட்ட துணிகள் மற்றும் படுக்கைகள் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனுடன், பொதுமக்களுக்குப் பெருமளவில் உணவு வழங்கும் மகாபிரசாதம், பண்டாரா போன்ற சமூக உணவு விநியோக நிகழ்வுகளை அமைப்பாளர்கள் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று FDA அறிவுறுத்தியுள்ளது. நுகர்வோரின் ஆரோக்கியத்தோடு விளையாடுவதைச் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ள FDA, உணவுத் தரம் குறித்து புகார்களைப் பதிவு செய்ய இலவச அழைப்பு எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…
கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரபல 'கௌர் சித்தார்தம் சொசைட்டி' குடியிருப்பில் 15-வது மாடியில் இருந்து குதித்து 16…
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையைத் தமிழக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பந்த்லகுடா பகுதியில் உள்ள ஒயின் ஷாப் அருகே 34 வயதான முகமது நயீம் என்ற ரியல்…